வடகொரிய ஜனாதிபதி உயிருடன் நலமாகயிருக்கின்றார்- தென்கொரியா


வடகொரிய ஜனாதிபதி உயிருடன் இருக்கின்றார் நலமாகயிருக்கின்றார் என தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய ஜனாதிபதியின் சிரேஸ்ட வெளிவிவகார கொள்கை ஆலோசகர் மூன் சங் இன் இதனை சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

அவர் உயிருடன் உள்ளார் நலமாக உள்ளார், அவர் ஏப்பிரல் 13 ம் திகதி முதல் வொன்சன் பகுதியில் காணப்படுகின்றார்,சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளை காணமுடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியானது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரிய இணைப்பு அமைச்சர் கிம் யினே சுல் வழமைக்கு மாறாக எதுவும் இடம்பெறவில்லை என்பதையே புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.