இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 79 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 821 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் இந்தியாவில் உள்ளவர்களுக்கே அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 79 ஆயிரத்து 457 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் சர்வதேச ரீதியில் 4 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 960 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 637 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 76 லட்சத்து 98 ஆயிரத்து 622 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.