கொழும்பில் வாகன நெரிசலுக்கு தீர்வாக ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, உத்தரானந்த மாவத்தையில் இரு மேம்பாலங்கள்.

கொழும்பு கொம்பனிவீதி பிரசேத்தில் காணப்படும் அதிக வாகன நெரிசலுக்கு தீர்வாக இரண்டு
மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொம்பனிவீதி ரயில் நிலையத்துக்கு அருகில் ஜஸ்டிஸ்  அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதியில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக 6 பில்லியன் ரூபாய் செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார்.

உத்தரானந்த மாவத அருகே கட்டப்படும் மேம்பாலம்   நீளம் 420 மீட்டர் ,
நீதிபதி அக்பர் மாவத அருகே 350 மீட்டர்  நீள மேம்பாலம் அமைக்கப்படும்.

ஸ்லேவ் ஐலன்ட் , கொழும்புக்குள் மிகவும் நெரிசலான பகுதியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த திட்டத்தை நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ சமர்ப்பித்தார்

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.