17 கிலோ சிறுத்தை இறைச்சியுடன் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பொலிசாரால் கைது .

 

கண்டி உடதும்பர பிரதேசத்தில்  நேற்று சிறுத்தையை கொன்ற  

குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 17 கிலோ எடையுள்ள  சிறுத்தை  இறைச்சி, அதன் சடலத்தின் பல்வேறு பாகங்கள், கத்தி மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றுடன் கலகமுவாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விலங்கு 10-14 வயதுக்கு இடைப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் கருதுகின்றனர்.

கலகமுவாவில் வசிக்கும் ஒரு பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களும் இன்று தெல்தெனிய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.